search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இந்திய ராணுவத்தினர்.
    X
    பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இந்திய ராணுவத்தினர்.

    எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் விரட்டியடிப்பு

    ஜம்மு காஷ்மீரின் மச்சால் பகுதியில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளை இந்திய ராணுவத்தினர் விரட்டியடித்தனர்.
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீரின் மச்சால் பகுதியில் ராணுவ வீரர்கள் இன்று அதிகாலை வழக்கம்போல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிகாலை 2.30 மணியளவில் 500 மீட்டர் தொலைவில் 5 முதல் 6 பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றனர்.

    இதைக்கண்ட ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினாலும், இந்திய ராணுவ வீரர்களை சமாளிக்க முடியாமல் தப்பியோடினர்.

    இந்தச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×