என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உன்னாவ் விவகாரம்: பாதிக்கப்பட்ட பெண்ணை விமானம் மூலம் டெல்லி எய்ம்சுக்கு மாற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவு
Byமாலை மலர்5 Aug 2019 8:36 AM GMT (Updated: 5 Aug 2019 8:39 AM GMT)
உன்னாவ் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது வழக்கறிஞர் கார் விபத்து ஒன்றில் படுகாயத்துடன் உயிர் தப்பினர். இருவரும் சிகிச்சைக்காக விமானம் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
புது டெல்லி:
உத்தரபிரதேசம் மாநிலம், உன்னாவ் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சாகர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த புகாரில், பணி தொடர்பாக விசாரிக்க குல்தீப்பின் உதவி தேடி அவரது வீட்டிற்கு அப்பெண் சென்றுள்ளார்.
அங்கு, குல்தீப் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. சமீபத்தில் அந்த பெண், தனது தாய், வழக்கறிஞர், மற்றும் உறவினர் ஒருவருடன் சேர்ந்து காரில் ரேபரேலி சென்றுக் கொண்டிருந்தார்.
இதனையடுத்து உன்னாவ் பெண் பாலியல் புகார் தொடர்பான அனைத்து வழக்குகளையும் டெல்லி சிறப்பு நீதிமன்றத்துக்கு உபி நீதிமன்றம் மாற்றியது. கார் விபத்தில் சிக்கிய பாதிக்கப்பட்ட பெண் மற்றும் வழக்கறிஞர் ஆகிய இருவரும் லக்னோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பான வழக்கினை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், கடந்த சனிக்கிழமை இருவருக்கும் சிகிச்சை அளித்த மருத்துவர்களின் மருத்துவ அறிக்கையின் அடிப்படையில், அப்பெண் மற்றும் வழக்கறிஞர் ஆகியோர் விமானம் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்படுவதாக உத்தரவிட்டுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம், உன்னாவ் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சாகர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த புகாரில், பணி தொடர்பாக விசாரிக்க குல்தீப்பின் உதவி தேடி அவரது வீட்டிற்கு அப்பெண் சென்றுள்ளார்.
அங்கு, குல்தீப் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. சமீபத்தில் அந்த பெண், தனது தாய், வழக்கறிஞர், மற்றும் உறவினர் ஒருவருடன் சேர்ந்து காரில் ரேபரேலி சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் வந்த கார் மீது லாரி மோதியது. அப்பெண், வழக்கறிஞர் ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இதனையடுத்து குல்தீப் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனையடுத்து உன்னாவ் பெண் பாலியல் புகார் தொடர்பான அனைத்து வழக்குகளையும் டெல்லி சிறப்பு நீதிமன்றத்துக்கு உபி நீதிமன்றம் மாற்றியது. கார் விபத்தில் சிக்கிய பாதிக்கப்பட்ட பெண் மற்றும் வழக்கறிஞர் ஆகிய இருவரும் லக்னோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பான வழக்கினை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், கடந்த சனிக்கிழமை இருவருக்கும் சிகிச்சை அளித்த மருத்துவர்களின் மருத்துவ அறிக்கையின் அடிப்படையில், அப்பெண் மற்றும் வழக்கறிஞர் ஆகியோர் விமானம் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்படுவதாக உத்தரவிட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X