என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
1999-ம் ஆண்டு அமலுக்கு வந்த 1000 ரூபாய் நோட்டு புழக்கத்துக்கான சட்டம் ரத்து
Byமாலை மலர்4 Aug 2019 10:46 PM GMT (Updated: 4 Aug 2019 10:46 PM GMT)
1999-ம் ஆண்டு அமலுக்கு வந்த 1000 ரூபாய் நோட்டு புழக்கத்துக்கான சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
சிறந்த நிர்வாகத்தை உறுதி செய்யும் வகையில், பயனற்றதாக இருக்கும் 58 சட்டங்களை நீக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் கடந்த வாரம் மசோதா நிறைவேறியது. இவ்வாறு ரத்து செய்யப்பட இருக்கும் 58 சட்டங்களில், உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் (பணமதிப்பு நீக்கம்) திருத்த சட்டம் 1998-ம் ஒன்றாகும்.
கடந்த 1999-ம் ஆண்டு அமலில் வந்த இந்த சட்டம் 1000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்கு வகை செய்வதற்காக கொண்டு வரப்பட்ட சட்டமாகும். இந்த சட்டத்தை கடந்த 1998-ம் ஆண்டு அப்போதைய நிதி மந்திரி யஷ்வந்த் சின்கா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதன் மூலம் 1978-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ரூபாய் நோட்டு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, 1999-ல் அமலாக்கப்பட்டது. இந்த சட்டம் மூலம் 1000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்கு ரிசர்வ் வங்கிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து ஒழிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சட்டமும் ரத்து செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த நிர்வாகத்தை உறுதி செய்யும் வகையில், பயனற்றதாக இருக்கும் 58 சட்டங்களை நீக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் கடந்த வாரம் மசோதா நிறைவேறியது. இவ்வாறு ரத்து செய்யப்பட இருக்கும் 58 சட்டங்களில், உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் (பணமதிப்பு நீக்கம்) திருத்த சட்டம் 1998-ம் ஒன்றாகும்.
கடந்த 1999-ம் ஆண்டு அமலில் வந்த இந்த சட்டம் 1000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்கு வகை செய்வதற்காக கொண்டு வரப்பட்ட சட்டமாகும். இந்த சட்டத்தை கடந்த 1998-ம் ஆண்டு அப்போதைய நிதி மந்திரி யஷ்வந்த் சின்கா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதன் மூலம் 1978-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ரூபாய் நோட்டு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, 1999-ல் அமலாக்கப்பட்டது. இந்த சட்டம் மூலம் 1000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்கு ரிசர்வ் வங்கிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து ஒழிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சட்டமும் ரத்து செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X