என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதல் மந்திரிக்கு பரிசளித்த மேயருக்கு ரூ.500 அபராதமா?
Byமாலை மலர்4 Aug 2019 10:24 AM GMT (Updated: 4 Aug 2019 11:03 AM GMT)
கர்நாடக மாநில முதல் மந்திரி எடியூரப்பாவை மரியாதை நிமித்தமாக சந்தித்து பரிசளித்த பெங்களூரு நகர பெண் மேயருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு:
கர்நாடக மாநில முதல் மந்திரி எடியூரப்பாவை மரியாதை நிமித்தமாக சந்தித்து பரிசளித்த பெங்களூரு நகர பெண் மேயருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்காக, பெங்களூரு நகர மாநகராட்சி சார்பில் மேயர் கங்காம்பிகே மல்லிகார்ஜுனுக்கு நேற்று 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
பெங்களூரு மாநாகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எடியூரப்பாவுக்கு அளித்த பரிசு கூடையின் மேற்புறத்தில் பிளாஸ்டிக் உறை சுற்றப்பட்டிருந்ததால் அந்த நகரத்தின் மேயர் என்றும் பாராமல் கங்காம்பிகே மல்லிகார்ஜுனுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநில முதல் மந்திரி எடியூரப்பாவை மரியாதை நிமித்தமாக சந்தித்து பரிசளித்த பெங்களூரு நகர பெண் மேயருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர் புதிய முதல் மந்திரியாக பதவியேற்ற எடியூரப்பாவை பல்வேறு தரப்பினரும் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதுடன், பரிசுப் பொருட்களையும் அளித்து வருகின்றனர்.
அவ்வகையில், பெங்களூரு நகர மாநாகராட்சியின் மேயராக பதவி வகிக்கும் கங்காம்பிகே மல்லிகார்ஜுன் எடியூரப்பாவை சந்திக்க சென்றார். அவருக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்த கங்காம்பிகே மல்லிகார்ஜுன், கனிகள் மற்றும் உலர் கனிகள் கொண்ட சிறிய கூடை ஒன்றை பரிசாக அளித்து, புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
இதற்காக, பெங்களூரு நகர மாநகராட்சி சார்பில் மேயர் கங்காம்பிகே மல்லிகார்ஜுனுக்கு நேற்று 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
பெங்களூரு மாநாகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எடியூரப்பாவுக்கு அளித்த பரிசு கூடையின் மேற்புறத்தில் பிளாஸ்டிக் உறை சுற்றப்பட்டிருந்ததால் அந்த நகரத்தின் மேயர் என்றும் பாராமல் கங்காம்பிகே மல்லிகார்ஜுனுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X