என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி கல்லூரி மாணவிகள் 4 பேர் பலி
Byமாலை மலர்3 Aug 2019 7:38 PM GMT (Updated: 3 Aug 2019 7:38 PM GMT)
நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி கல்லூரி மாணவிகள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மும்பை:
நவிமும்பை நெருல் பகுதியில் எஸ்.ஐ.இ.எஸ். கல்லூரி உள்ளது. இங்கு படிக்கும் 9 மாணவ-மாணவிகள் நேற்று காலை கார்கர் பகுதிக்கு சுற்றுலா சென்றனர். அப்போது அந்த பகுதியில் பலத்த மழை பெய்து கொண்டு இருந்தது.
இருப்பினும் மாணவ-மாணவிகள் காலை 11 மணியளவில் பான்டவ்காடா மலைப்பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் குளித்து கொண்டு இருந்தனர்.
இந்தநிலையில், மழை காரணமாக திடீரென நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் அங்கு குளித்துக்கொண்டிருந்த 4 மாணவிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மற்ற மாணவ-மாணவிகள் இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 4 மாணவிகளையும் தேடினர். இதில் செம்பூர் நாக்கா பகுதியை சேர்ந்த ஸ்நேகா (வயது19) என்ற மாணவி பிணமாக மீட்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, ஸ்வேதா, ஆர்த்தி, நேகா ஆகிய 3 மாணவிகளும் பிணமாக மீட்கப்பட்டனர்.
கார்கருக்கு சுற்றுலா சென்ற இடத்தில் நீர்வீழ்ச்சியில் அடித்து செல்லப்பட்டு 4 மாணவிகள் பலியான சம்பவம் நெருல் கல்லூரி மாணவர்கள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நவிமும்பை நெருல் பகுதியில் எஸ்.ஐ.இ.எஸ். கல்லூரி உள்ளது. இங்கு படிக்கும் 9 மாணவ-மாணவிகள் நேற்று காலை கார்கர் பகுதிக்கு சுற்றுலா சென்றனர். அப்போது அந்த பகுதியில் பலத்த மழை பெய்து கொண்டு இருந்தது.
இருப்பினும் மாணவ-மாணவிகள் காலை 11 மணியளவில் பான்டவ்காடா மலைப்பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் குளித்து கொண்டு இருந்தனர்.
இந்தநிலையில், மழை காரணமாக திடீரென நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் அங்கு குளித்துக்கொண்டிருந்த 4 மாணவிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மற்ற மாணவ-மாணவிகள் இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 4 மாணவிகளையும் தேடினர். இதில் செம்பூர் நாக்கா பகுதியை சேர்ந்த ஸ்நேகா (வயது19) என்ற மாணவி பிணமாக மீட்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, ஸ்வேதா, ஆர்த்தி, நேகா ஆகிய 3 மாணவிகளும் பிணமாக மீட்கப்பட்டனர்.
கார்கருக்கு சுற்றுலா சென்ற இடத்தில் நீர்வீழ்ச்சியில் அடித்து செல்லப்பட்டு 4 மாணவிகள் பலியான சம்பவம் நெருல் கல்லூரி மாணவர்கள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X