search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி- அமித்ஷா
    X
    பிரதமர் மோடி- அமித்ஷா

    பா.ஜனதா எம்.பி.க்களுக்கு 2 நாள் பயிற்சி வகுப்பு- பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு

    பா.ஜனதா எம்.பி.க்களுக்கு ‘அப்யாஸ் வர்கா’ எனப்படும் 2 நாள் பயிற்சி வகுப்பு டெல்லியில் இன்று தொடங்கியது. இதில் பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்றனர்.

    புதுடெல்லி:

    பாரதீய ஜனதா கட்சியின் மந்திரிகள் மற்றும் எம்.பி.க்களுக்கு ‘அப்யாஸ் வர்கா’ எனப்படும் 2 நாள் பயிற்சி வகுப்புகள் டெல்லி பாலயோகி ஆடிட்டோரியத்தில் இன்று தொடங்கியது. இதில் பிரதமர் மோடி, பா.ஜனதா தலைவர் அமித்ஷா, செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் பங்கேற்றனர். 

    தொகுதியின் வளர்ச்சிக்காக என்னென்ன திட்டங்கள் செய்ய வேண்டும். கட்சியின் பிரசார யுக்திகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் வகுப்புகளை நடத்தினர்.

    ஏற்கனவே கடந்த மாதம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்த போது பிரதமர் மோடி, பா.ஜனதா எம்.பி.க்களை பல்வேறு பிரிவுகளாக பிரித்து சந்தித்தார். அப்போது மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர். மேலும் நாடாளுமன்றத்தில் நடந்து கொள்ளும் முறைகள் பற்றியும் விவாதித்தனர். இந்த கூட்டம் புதிய எம்.பி.க்களுக்கு நல்ல வாய்ப்பாக இருந்ததாக தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக இன்று தொடங்கிய பயிற்சி வகுப்பு நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

    Next Story
    ×