search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத் வெள்ள நிவாரண பணிகள்
    X
    குஜராத் வெள்ள நிவாரண பணிகள்

    குஜராத்தில் கனமழை - வதோதராவில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 4 பேர் பலி

    குஜராத்தின் வதோதராவில் பெய்து வரும் தொடர் மழையால், அப்பகுதியில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் பலியாகினர்.
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வதோதரா மாவட்டம் வெள்ளத்தில் மிதக்கிறது. மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    வெள்ளம் வடிந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், நிவாரண பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பேரிடர் மீட்புக்குழுவினர் முழு வீச்சில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுதொடர்பாக மாநில முதல் மந்திரி விஜய் ரூபானி கூறுகையில், வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் மின்சார இணைப்பு விரைவில் சீராக்கப்படும். குடிநீர் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய தேவைகளும் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    மேலும், வதோதரா மாவட்டம் சானி பகுதியில் மழையால் சுவர் இடிந்த விபத்தில் சிக்கி பலியான 4 பேரின் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என தெரிவித்தார்.  
    Next Story
    ×