என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரெயில்வே மந்திரியுடன் சரத்குமார் சந்திப்பு - விருதுநகரில், புதிய ரெயில் நிறுத்தத்துக்கு கோரிக்கை
Byமாலை மலர்1 Aug 2019 10:45 PM GMT (Updated: 1 Aug 2019 10:45 PM GMT)
ரெயில்வே மந்திரியுடன் சரத்குமார் சந்திப்பு" விருதுநகரில் ரெயில் நிறுத்தம் வேண்டும் என்று ரெயில்வே மந்திரி பியூஷ்கோயலை டெல்லியில் நேரில் சந்தித்து சரத்குமார் கோரிக்கை விடுத்தார்.
புதுடெல்லி:
விருதுநகர் மாவட்டம் கள்ளிக்குடியில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் முயற்சியால் உருவாக்கப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபத்தை கடந்த மாதம் 15-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.
இந்த நிலையில், இந்த ஊரில் பயணிகள் சென்று வர வசதியாக ரெயில் நிறுத்தம் வேண்டும் என்று ரெயில்வே மந்திரி பியூஷ்கோயலை டெல்லியில் நேரில் சந்தித்து சரத்குமார் கோரிக்கை விடுத்தார்.
பின்னர் சரத்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘மணிமண்டபத்தை சுற்றிப்பார்க்க வசதியாக இருக்கும் என்பதால் இப்பகுதியில் ரெயில் நிறுத்தம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி மத்திய மந்திரியிடம் கோரிக்கையை வைத்ததாகவும், அவர் பரிசீலனை செய்வதாக கூறியதாகவும் தெரிவித்தார்.
மேலும், மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை தாங்கள் வரவேற்பதாகவும், இதன் பயன்குறித்து ஆவணப்படம் ஒன்றை தயாரித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரியிடம் சமர்ப்பிக்க இருப்பதாகவும் கூறினார்.
விருதுநகர் மாவட்டம் கள்ளிக்குடியில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் முயற்சியால் உருவாக்கப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபத்தை கடந்த மாதம் 15-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.
இந்த நிலையில், இந்த ஊரில் பயணிகள் சென்று வர வசதியாக ரெயில் நிறுத்தம் வேண்டும் என்று ரெயில்வே மந்திரி பியூஷ்கோயலை டெல்லியில் நேரில் சந்தித்து சரத்குமார் கோரிக்கை விடுத்தார்.
பின்னர் சரத்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘மணிமண்டபத்தை சுற்றிப்பார்க்க வசதியாக இருக்கும் என்பதால் இப்பகுதியில் ரெயில் நிறுத்தம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி மத்திய மந்திரியிடம் கோரிக்கையை வைத்ததாகவும், அவர் பரிசீலனை செய்வதாக கூறியதாகவும் தெரிவித்தார்.
மேலும், மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை தாங்கள் வரவேற்பதாகவும், இதன் பயன்குறித்து ஆவணப்படம் ஒன்றை தயாரித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரியிடம் சமர்ப்பிக்க இருப்பதாகவும் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X