search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டோங்குப்பார் ராய்
    X
    டோங்குப்பார் ராய்

    மேகாலயா சபாநாயகர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

    மேகாலயா சட்டசபை சபாநாயகரும் அம்மாநில முன்னாள் முதல் மந்திரியுமான டோன்குப்பார் ராய் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    மேகாலயா மாநில முதல் மந்திரியாக கடந்த 2008-2009 ஆண்டுகளுக்கு இடையில் பதவி வகித்த டோன்குப்பார் ராய் அம்மாநிலத்தின் ஐக்கிய ஜனநாயக கட்சியின் தலைவராகவும், சட்டசபை சபாநாயகராகவும் இருந்து வந்தார்.

    இந்நிலையில், உடல் நலக்குறைவால் தனது 64-வது வயதில் டோன்குப்பார் ராய்  இன்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    சபாநாயகர் இருக்கையில் டோங்குப்பார் ராய்

    ’டாக்டர் டோன்குப்பார் ராய் மறைவு செய்தியால் வேதனை அடைந்துள்ளேன். மேலாலாயா மாநிலத்தின் முன்னேற்றத்துக்காக அரும்பணியாற்றிய அவர், பலரது வாழ்க்கையில் மாற்றி அமைக்க உதவிகரமாக இருந்துள்ளார்.

    அவரது பிரிவால் வாழும் குடும்பத்தாருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என பிரதமர் அலுவலகத்தின் சார்பில் வெளியான இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×