search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துப்பாக்கியால் குறிவைக்கும் பாதுகாப்பு படை வீரர்
    X
    துப்பாக்கியால் குறிவைக்கும் பாதுகாப்பு படை வீரர்

    சத்தீஸ்கர் மாநிலத்தில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

    சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்ட்டார் மாவட்டத்தில் இன்று சிறப்பு படையினரின் தேடுதல் வேட்டையில் 7 நக்சலைட் இயக்கத்தை சேர்ந்த 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    ராய்பூர்:

    மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர்.

    பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, ஜார்கண்ட், மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.

    போர் பயிற்சியில் நக்சலைட்டுகள்

    இவர்களை வேட்டையாட தனிப்படை பிரிவினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் உடன் செல்வதுண்டு.

    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்ட்டார் மாவட்டத்தில் சில நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக அம்மாவட்ட சிறப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, அப்பகுதியை இன்று மாலை சிறப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.

    அங்கு மறைந்திருந்த நக்சலைட்டுகள் சிறப்பு படையினர் மீது துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில் வெடித்த துப்பாக்கிச் சண்டையில் 7 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக நக்சல் ஒழிப்பு வேட்டை சிறப்பு படை டி.ஐ.ஜி. சுந்தர் ராஜ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×