என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறு தொழில் உற்பத்தி பொருட்களை விற்க தனி இணையதளம் - நிதின் கட்காரி தகவல்
Byமாலை மலர்25 July 2019 8:32 PM GMT (Updated: 25 July 2019 8:32 PM GMT)
அமேசான், அலிபாபா பாணியில் சிறு தொழில் உற்பத்தி பொருட்களை விற்க தனி இணையதளம் தொடங்க இருப்பதாக மத்திய சிறு, குறு தொழில்துறை மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மத்திய சிறு, குறு தொழில்துறை மந்திரி நிதின் கட்காரி ஒரு கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வேலைவாய்ப்பு உருவாக்கத்திலும், நாட்டின் வளர்ச்சியிலும் சிறு, குறு தொழில்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. அத்தகைய துறையை சேர்ந்தவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பதற்காக இன்னும் ஒரு மாத காலத்தில் தனி இணையதளம் தொடங்கப்படும்.
இதுதொடர்பாக அரசு மின்னணு சந்தையிடமும், மத்திய வர்த்தக மந்திரி பியூஸ் கோயலிடமும் பேசிவிட்டேன். அமெரிக்காவில் உள்ள அமேசான், சீனாவின் வளர்ச்சிக்கு உதவிய அலிபாபா போன்று இந்த இணையதளம் உருவாக்கப்படும். இதன்மூலம், அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இது, சிறு, குறு தொழில்துறைக்கு நல்ல வாய்ப்பு. அத்துறைக்கு வங்கிகள் வழங்கும் கடன் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பாராளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மத்திய சிறு, குறு தொழில்துறை மந்திரி நிதின் கட்காரி ஒரு கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வேலைவாய்ப்பு உருவாக்கத்திலும், நாட்டின் வளர்ச்சியிலும் சிறு, குறு தொழில்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. அத்தகைய துறையை சேர்ந்தவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பதற்காக இன்னும் ஒரு மாத காலத்தில் தனி இணையதளம் தொடங்கப்படும்.
இதுதொடர்பாக அரசு மின்னணு சந்தையிடமும், மத்திய வர்த்தக மந்திரி பியூஸ் கோயலிடமும் பேசிவிட்டேன். அமெரிக்காவில் உள்ள அமேசான், சீனாவின் வளர்ச்சிக்கு உதவிய அலிபாபா போன்று இந்த இணையதளம் உருவாக்கப்படும். இதன்மூலம், அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இது, சிறு, குறு தொழில்துறைக்கு நல்ல வாய்ப்பு. அத்துறைக்கு வங்கிகள் வழங்கும் கடன் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X