search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணுவ தளபதி பிபின் ராவத்
    X
    ராணுவ தளபதி பிபின் ராவத்

    கார்கில் போன்ற ஊடுருவலை பாகிஸ்தான் இனி ஒருபோதும் முயற்சிக்க வேண்டாம் - ராணுவ தளபதி எச்சரிக்கை

    ஜம்மு காஷ்மீரின் கார்கில் போன்ற ஊடுருவலை பாகிஸ்தான் இனி ஒருபோதும் முயற்சிக்க வேண்டாம் என ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் எல்லையில் உள்ள கார்கில் பகுதியில் கடந்த 1999-ம் ஆண்டு ஊடுருவிய பாகிஸ்தான் படையினர், எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி சுமார் 200 கி.மீ. வரை ஆக்கிரமித்தனர். இந்திய நிலைகளையும் கைப்பற்றியது. இதையடுத்து இந்திய ராணுவம் மிகப்பெரும் தாக்குதலை நடத்தி பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டியடித்தது. 
     
    இந்தப் போரின்போது வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கார்கில் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    கார்கில் வெற்றி தினத்தை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ராணுவ வீரர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேபோல் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு வீரவணக்கமும் செலுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் டிராஸ் பகுதிக்கு ராணுவ தளபதி பிபின் ராவத் இன்று வருகை தந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கார்கில் ஊடுருவல் போன்ற தவறை பாகிஸ்தான் இனி செய்யாது. பாகிஸ்தான் ராணுவத்தினரின் அடாவடியால் நடந்தது கார்கில் போர். வரும் காலத்தில் கார்கில் போன்ற ஊடுருவலை பாகிஸ்தான் இனி ஒருபோதும் முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×