என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பீகாரில் வயல்வெளியில் விழுந்த விண்கல்.. முதல்வர் நிதிஷ் குமாரின் உத்தரவு
Byமாலை மலர்25 July 2019 9:09 AM GMT (Updated: 25 July 2019 9:20 AM GMT)
பீகார் மாநிலத்தின் மதுபாணி பகுதியில் விண்கல் ஒன்று விழுந்துள்ளது. இது குறித்து முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
பாட்னா:
இதுகுறித்து பீகார் அரசு தரப்பில் கூறுகையில், ‘விண்கல் விழுந்த இடத்தில் நிலத்தில் 5 அடி ஆழத்தில் பள்ளம் வெட்டினர். காந்தப் பண்புகள் கொண்ட 13 கிலோ கிராம் கொண்ட இந்த விண்கல்லை தோண்டி எடுத்தனர்.
இதையடுத்து நேற்று பாட்னாவில் உள்ள முதல்வரின் இல்லத்திற்கு அந்த விண்கல் கொண்டு செல்லப்பட்டது. அரசின் விதிப்படி, கொண்டுவரப்பட்ட விண்கல்லை பீகார் அருங்காட்சியகத்தில் வைக்கும்படி நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்’.
கூடிய விரைவில், விண்கல் நிபுணர்களின் ஆய்வுக்காகவும், அதன் உண்மை தன்மையைக் கண்டறியவும் தலைநகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா அறிவியல் மையத்திற்கு விண்கல் மாற்றப்படும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பீகார் மாநிலத்தில் உள்ள மதுபாணி மாவட்டத்தில் காந்தப் பண்புகளைக் கொண்ட 13 கிலோ எடை கொண்ட விண்கல் ஒன்று வயல்வெளிப் பகுதியில் விழுந்துள்ளது.
உரத்த சத்தத்துடன் படுவேகமாக வந்து விழுந்து, பூமிக்குள் புதைந்த அந்த விண்கல்லை அருகே வயலில் வேலை செய்துக்கொண்டிருந்த விவசாயிகள் பார்த்தனர்.
இதுகுறித்து பீகார் அரசு தரப்பில் கூறுகையில், ‘விண்கல் விழுந்த இடத்தில் நிலத்தில் 5 அடி ஆழத்தில் பள்ளம் வெட்டினர். காந்தப் பண்புகள் கொண்ட 13 கிலோ கிராம் கொண்ட இந்த விண்கல்லை தோண்டி எடுத்தனர்.
இந்த விண்கல் முதலில் மாவட்ட கருவூலத்தில் வைக்கப்பட்டது. பின்னர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு மாற்றப்பட்டது. முதல்வர் நிதிஷ் குமாரிடம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று பாட்னாவில் உள்ள முதல்வரின் இல்லத்திற்கு அந்த விண்கல் கொண்டு செல்லப்பட்டது. அரசின் விதிப்படி, கொண்டுவரப்பட்ட விண்கல்லை பீகார் அருங்காட்சியகத்தில் வைக்கும்படி நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்’.
கூடிய விரைவில், விண்கல் நிபுணர்களின் ஆய்வுக்காகவும், அதன் உண்மை தன்மையைக் கண்டறியவும் தலைநகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா அறிவியல் மையத்திற்கு விண்கல் மாற்றப்படும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X