என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீர் விவகாரம்: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டும் - ராகுல் காந்தி
Byமாலை மலர்23 July 2019 10:27 AM GMT (Updated: 23 July 2019 10:27 AM GMT)
காஷ்மீர் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய கருத்து தொடர்பாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
புதுடெல்லி:
காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்யும்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடி கேட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அப்படி எந்த கோரிக்கையையும் டிரம்பிடம் பிரதமர் மோடி வைக்கவில்லை என இந்தியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். பிரதமர் பதில் அளிக்க வலியுறுத்தி முழக்கமிட்டதால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், காஷ்மீர் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய கருத்து தொடர்பாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், காஷ்மீர் விவகாரம் குறித்து இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பேச்சில் டிரம்பை தலையிட மோடி கேட்டுக்கொண்டதாக டிரம்ப் கூறியுள்ளார். ஆனால் பலவீனமான வெளியுறவுத்துறை இதனை இல்லை என மறுக்கிறது.
இது உண்மையாக இருக்குமானால் 1972 சிம்லா ஒப்பந்தப்படி மோடி நடக்கவில்லை. மேலும், அவர் மக்களை ஏமாற்றியுள்ளார். டிரம்ப் உடன் நடந்த சந்திப்பில் மோடி பேசியது என்ன என்பது குறித்து நாட்டு மக்களுக்கு மோடி விளக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X