என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்- வைகோ பங்கேற்பு
Byமாலை மலர்23 July 2019 9:15 AM GMT (Updated: 23 July 2019 9:15 AM GMT)
டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டார்.
புதுடெல்லி:
தமிகத்தில் விவசாய நிலங்களில் உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கும் திட்டம் மற்றும் கோவை முதல் பெங்களூர் வரை விளைநிலங்கள் வழியாக கெயில் எண்ணெய் எரிவாயு குழாய் அமைக்கும் திட்டம் உள்பட விவசாயிகளை பாதிக்கும் பல்வேறு திட்டங்களை அமல்படுத்துவதை எதிர்த்து டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் கோவை, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர் ம.தி.மு.க. பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ ஜந்தர் மந்தர் சென்று தமது ஆதரவை தெரிவித்தார். இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தரும் பங்கேற்று ஆதரவு தெரிவித்தார்.
இப்போராட்டத்தில் பங்கேற்ற வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில், வளர்ச்சித் திட்டங்களை எதிர்க்கவில்லை என்றும், மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் திட்டங்களை எதிர்ப்பதாகவும் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X