search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்னல்
    X
    மின்னல்

    உத்திரபிரதேசத்தில் மின்னல் தாக்கி 7 பேர் பலி

    உத்திரபிரதேச மாநிலத்தில் இன்று பெய்த கனமழையின் போது மின்னல் தாக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    லக்னோ:

    உத்திரபிரதேசம் மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

    இந்நிலையில், மாநிலத்தில் இன்று பெய்த  இடியுடன் கூடிய கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்னல் சீறிப்பாய்ந்தது. அப்போது மின்னல் தாக்கி ஜலாவுன் மாவட்டத்தில் 4 நபர்களும், ஹமீர்பூர் பகுதியில் 3 நபர்களும் , பண்டா மற்றும் சித்ரகோட் மாவட்டங்களில் தலா ஒரு நபரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்துள்ளனர். 

    மின்னல் தாக்கி படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.     
    Next Story
    ×