search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசார் விசாரணை நடத்திய காட்சி.
    X
    போலீசார் விசாரணை நடத்திய காட்சி.

    உ.பி.யில் வேன்-லாரி பயங்கர மோதல்: 9 பேர் பலி

    உத்திர பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வீடு திரும்பியவர்கள் வந்த வேன் மீது லாரி மோதிய விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    லக்னோ:

    உத்திரபிரதேச மாநிலத்தின் தவ்லானா பகுதி உள்ளது. அப்பகுதியில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு 27 பேர் கொண்ட குழு ஒன்று மீரட் நோக்கி வேனில் வந்துகொண்டிருந்தது. 

    வேன் புலந்த்ஷாஹர் மாவட்டத்தின் ஹபீஸ்பூர் பகுதியை கடந்தபோது சாலையின் ஏதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் வேனில் பயணம் செய்த 9 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் 18 பேர் படுகாயமடைந்தனர். 

    இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×