என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேஸ்புக் லைவில் தற்கொலை செய்துக் கொண்ட வாலிபரின் உருக்கமான பதிவு
Byமாலை மலர்22 July 2019 9:13 AM GMT (Updated: 22 July 2019 9:13 AM GMT)
ஆக்ராவில் பேஸ்புக் லைவ் மூலமாக தற்கொலை செய்துக் கொண்ட வாலிபர் உருக்கமான பதிவினை விட்டுச் சென்றுள்ளார்.
ஆக்ரா:
ஆக்ராவின் ரைபா கிராமத்தைச் சேர்ந்தவர் ஷியாம் சிகர்வார்(22). இவர் காதலித்து வந்த பெண்ணுக்கும் வேரொருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ஷியாம், அவர் வசித்த பகுதிக்கு அருகே உள்ள கோவிலில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
இவர் தற்கொலை செய்வதற்கு முன்பாக அவர் தனது நண்பர்கள், குடும்பத்தாருக்கு பேஸ்புக்கில் லைவாக இறப்பது குறித்து பேசியுள்ளார். பின்னர் அவர் தற்கொலை செய்வதையும் லைவாக எடுத்துள்ளார்.
மேலும் தனது தற்கொலைக்கான காரணம் குறித்து 4 பக்கங்கள் அடங்கிய குறிப்பினை விட்டுச் சென்றுள்ளார். அதில் ஷியாம், 'நான் அவளை மிஸ் பண்ணிவிட்டேன். என்னால் அவள் இன்றி வாழ இயலாது.
அவளுக்கு வேரொருவருடன் திருமணம் ஆகப்போவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவளை பிரிந்த மன அழுத்தம் என்னை கடுமையாக தாக்கியுள்ளது. இதனால் என் வேலையும் பறிபோனது' என குறிப்பிட்டுள்ளார்.
ஆக்ராவின் ரைபா கிராமத்தைச் சேர்ந்தவர் ஷியாம் சிகர்வார்(22). இவர் காதலித்து வந்த பெண்ணுக்கும் வேரொருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ஷியாம், அவர் வசித்த பகுதிக்கு அருகே உள்ள கோவிலில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
இவர் தற்கொலை செய்வதற்கு முன்பாக அவர் தனது நண்பர்கள், குடும்பத்தாருக்கு பேஸ்புக்கில் லைவாக இறப்பது குறித்து பேசியுள்ளார். பின்னர் அவர் தற்கொலை செய்வதையும் லைவாக எடுத்துள்ளார்.
மேலும் தனது தற்கொலைக்கான காரணம் குறித்து 4 பக்கங்கள் அடங்கிய குறிப்பினை விட்டுச் சென்றுள்ளார். அதில் ஷியாம், 'நான் அவளை மிஸ் பண்ணிவிட்டேன். என்னால் அவள் இன்றி வாழ இயலாது.
அவளுக்கு வேரொருவருடன் திருமணம் ஆகப்போவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவளை பிரிந்த மன அழுத்தம் என்னை கடுமையாக தாக்கியுள்ளது. இதனால் என் வேலையும் பறிபோனது' என குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், 'ஷியாம், காதலித்த பெண் தனக்கு இல்லை என்ற மன அழுத்தத்தில் இவ்வாறு செய்துக் கொண்டுள்ளார். மேலும் வேலையையும் இழந்து தவித்துள்ளார்.
ஷியாமின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தோம். இப்போது அவரது உடலை குடும்பத்தாரிடம் கொடுத்துவிட்டோம்' என கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X