search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவேந்திர பட்னாவிஸ்
    X
    தேவேந்திர பட்னாவிஸ்

    மீண்டும் முதல்-மந்திரி ஆவேன்- தேவேந்திர பட்னாவிஸ் நம்பிக்கை

    ‘மீண்டும் முதல்-மந்திரி ஆவேன்’ என தேவேந்திர பட்னாவிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    மும்பை :

    மராட்டியத்தில் பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் இந்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் கூட்டணியாக போட்டியிட முடிவு செய்துள்ளன. இந்தநிலையில் மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்கப்போவது யார் என்ற கேள்வி கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே பா.ஜனதா செயற்குழு கூட்டத்தில் கட்சி தொண்டர்கள் மத்தியில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாவது:-

    நான் பா.ஜனதாவுக்கு மட்டும் அல்ல சிவசேனா, ராஸ்டிரீய சமாஜ் கட்சி, குடியரசு கட்சி உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் முதல்-மந்திரி ஆவேன். மக்கள் அடுத்த முதல்-மந்திரி யார் என்பதை முடிவு செய்வார்கள். நீங்கள் அதை பற்றி கவலைப்படவேண்டாம். நாம் செய்த பணிகள் நமக்காக மக்களிடம் பேசும். நான் ஏற்கனவே இதை கூறியது போல மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்பேன்.

    சிலர் அடுத்த முதல்-மந்திரி யார் என்ற பிரச்சினையை தேவையில்லாமல் எழுப்புகின்றனர். அந்த வலையில் விழ வேண்டாம். இதுகுறித்து இரு கட்சிகளையும் சேர்ந்தவர்களும் தேவையில்லாமல் பேசுகிறார்கள்.

    மற்ற கட்சிகளில் உள்ள மேலும் சில நல்ல தலைவர்கள் பா.ஜனதாவில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனால் நமது கட்சியை சேர்ந்த யாரும் தொந்தரவுக்கு உள்ளாகக்கூடாது. 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட 85 சதவீதம் பேர் நமது கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர்.

    இவ்வாறு அவர் தொண்டர்களிடம் கூறினார்.
    Next Story
    ×