என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கிரஸ் தேசிய தலைவராக பிரியங்காவுக்கு வாய்ப்பு? - நட்வர் சிங் சூசக தகவல்
Byமாலை மலர்21 July 2019 9:09 AM GMT (Updated: 21 July 2019 9:09 AM GMT)
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்துள்ள நிலையில் அந்த வாய்ப்பு பிரியங்கா காந்திக்கு வழங்கப்படலாம் என மத்திய முன்னாள் மந்திரி நட்வர் சிங் குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார்.
ராஜினாமா முடிவை கைவிடுங்கள் என்று 5 மாநிலங்களை ஆளும் காங்கிரஸ் முதல் மந்திரிகள் மற்றும் நேற்று மரணம் அடைந்த டெல்லி முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித் உள்ளிட்டோர் முன்னர் ராகுல் காந்தியை சந்தித்து வலியுறுத்தியும் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதற்கிடையில், ராஜினாமா முடிவை ராகுல் காந்தி கைவிட வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தின் அருகே சில நாட்களாக அக்கட்சி தொண்டர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், தனது முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்பதில் ராகுல் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ராகுல் காந்தியின் ராஜினாமா ஏற்கப்பட்டால் தலைவர் பதவியில் அவரது தங்கை பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்ட வாய்ப்பு உள்ளதா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த தலைவரும் மத்திய முன்னாள் மந்திரியுமான நட்வர் சிங் பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக பிரியங்கா காந்திதான் தீர்மானிக்க வேண்டும். ஏற்கனவே, ‘காந்தி குடும்பத்தில் இருந்து வராத யாராவது ஒருவர்கூட காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ஆகலாம்’ என்று ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இந்த முடிவில் இருந்து அவரது குடும்பம் தற்போது பின்வாங்க வேண்டி இருக்கும் என நட்வர் சிங் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X