என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாஜகவினருடன் உணவு சாப்பிட்ட துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா
Byமாலை மலர்20 July 2019 2:22 AM GMT (Updated: 20 July 2019 2:22 AM GMT)
விதானசவுதாவில் தொடர் தர்ணாவில் ஈடுபட்ட பா.ஜனதாவினருடன் உணவு சாப்பிட்டதுடன், அவர்களது உடல் நலம் குறித்தும் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் விசாரித்தார்.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபையில் நேற்று முன்தினம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று முன் தினம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை. இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தி பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் விதானசவுதாவில் தொடர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் இரவு விதானசவுதாவில் எடியூரப்பா உள்ளிட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் படுத்து தூங்கினார்கள். அங்கு வைத்தே நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று காலை உணவு சாப்பிட்டனர். இந்த நிலையில், நேற்று காலையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது திடீரென்று துணை முதல்-மந்திரியான பரமேஸ்வர் அங்கு வந்தார்.
பின்னர் எடியூரப்பா உள்ளிட்டோரிடம் அவர் நலம் விசாரித்தார். விதானசவுதாவில் தூங்குவதற்கு மிகவும் கஷ்டமாக இருந்திருக்கும் என்பதால் காலையிலேயே வந்து பா.ஜனதாவினருடன் பரமேஸ்வர் வந்து பேசியதாக தெரிகிறது. அதன்பிறகு, பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுடன் சேர்ந்து விதானசவுதாவில் வைத்து துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் உணவு சாப்பிட்டார். அந்த சந்தர்ப்பத்தில் அவருடன் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களான சுரேஷ் குமார், ராமதாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் துணைமுதல்- மந்திரி பரமேஸ்வர் நிருபர்களிடம் கூறுகையில், “சட்ட சபைக்குள் பேசுவது வேறு, சட்டசபைக்கு வெளியில் நடந்து கொள்வது வேறு. நான் பா.ஜனதாவினருக்கு எதிரி அல்ல. அவர்களும் எனக்கு எதிரி அல்ல. பா.ஜனதாவில் எனக்கு ஏராளமான நண்பர்கள் உள்ளனர். விதானசவுதாவில் தொடர் தர்ணாவில் ஈடுபட்டதுடன், எடியூரப்பா உள்ளிட்ட அனைவரும் இங்கே படுத்து தூங்கியுள்ளனர். இதனால் அவர்களது உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக வந்தேன்“ என்றார்.
கர்நாடக சட்டசபையில் நேற்று முன்தினம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று முன் தினம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை. இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தி பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் விதானசவுதாவில் தொடர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் இரவு விதானசவுதாவில் எடியூரப்பா உள்ளிட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் படுத்து தூங்கினார்கள். அங்கு வைத்தே நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று காலை உணவு சாப்பிட்டனர். இந்த நிலையில், நேற்று காலையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது திடீரென்று துணை முதல்-மந்திரியான பரமேஸ்வர் அங்கு வந்தார்.
பின்னர் எடியூரப்பா உள்ளிட்டோரிடம் அவர் நலம் விசாரித்தார். விதானசவுதாவில் தூங்குவதற்கு மிகவும் கஷ்டமாக இருந்திருக்கும் என்பதால் காலையிலேயே வந்து பா.ஜனதாவினருடன் பரமேஸ்வர் வந்து பேசியதாக தெரிகிறது. அதன்பிறகு, பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுடன் சேர்ந்து விதானசவுதாவில் வைத்து துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் உணவு சாப்பிட்டார். அந்த சந்தர்ப்பத்தில் அவருடன் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களான சுரேஷ் குமார், ராமதாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் துணைமுதல்- மந்திரி பரமேஸ்வர் நிருபர்களிடம் கூறுகையில், “சட்ட சபைக்குள் பேசுவது வேறு, சட்டசபைக்கு வெளியில் நடந்து கொள்வது வேறு. நான் பா.ஜனதாவினருக்கு எதிரி அல்ல. அவர்களும் எனக்கு எதிரி அல்ல. பா.ஜனதாவில் எனக்கு ஏராளமான நண்பர்கள் உள்ளனர். விதானசவுதாவில் தொடர் தர்ணாவில் ஈடுபட்டதுடன், எடியூரப்பா உள்ளிட்ட அனைவரும் இங்கே படுத்து தூங்கியுள்ளனர். இதனால் அவர்களது உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக வந்தேன்“ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X