என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எருமை மாட்டை திருட வந்ததாக பீகாரில் 3 பேர் அடித்துக்கொலை
Byமாலை மலர்19 July 2019 4:16 PM GMT (Updated: 19 July 2019 4:16 PM GMT)
பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் எருமை மாடு திருட வந்ததாக 3 பேர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா:
பீகார் மாநிலத்தின் சரண் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் பிதாயூரி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் எருமை மாடுகள் கட்டி வைக்கப்பட்டுள்ள இடத்தில் 3 நபர்கள் இன்று சுற்றித் திரிந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவர்களையும் சுற்றி வளைத்தனர்.
இதையடுத்து, அந்த நபர்கள் தப்பி செல்ல முயற்சித்தனர். அதற்குள் அந்த கும்பல் 3 பேர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுவரை 3 பேரை கைது செய்துள்ளதாகவும் மேலும், சிலரை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X