என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரள லாட்டரியில் லாரி டிரைவருக்கு ரூ.80 லட்சம் பரிசு
Byமாலை மலர்19 July 2019 6:40 AM GMT (Updated: 19 July 2019 6:40 AM GMT)
கேரள மாநிலத்தில் லாரி டிரைவர் வாங்கிய லாட்டரிக்கு முதல் பரிசான ரூ.80 லட்சம் பரிசு கிடைத்துள்ளது. இப்பணம் மூலம் மகளின் எம்.பி.பி.எஸ். படிப்பு கனவை நிறைவேற்றுவேன் என்று தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் குதிரை குளம் பகுதியைச் சேர்ந்தவர் விஜிகுமார் (வயது 46). டிப்பர் லாரி டிரைவர்.
விஜிகுமார் ஓட்டிய லாரியின் உரிமையாளர் மோகனுடன் சேர்ந்து இருவரும் தனித்தனியாக கேரள அரசு லாட்டரி சீட்டு வாங்கி இருந்தனர்.
லாரி உரிமையாளர் மோகன் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்து இருக்கிறதா? என்பதை பார்க்க சென்றபோது லாரி டிரைவர் விஜிகுமாருக்கு லாட்டரியில் முதல் பரிசான ரூ.80லட்சம் விழுந்திருப்பது தெரிய வந்தது.
லாரி உரிமையாளர் மோகன், இத்தகவலை டிரைவர் விஜிகுமாருக்கு தெரிவித்தார். அவர், மகிழ்ச்சியில் திக்குமுக்காடினார். லாட்டரியில் கிடைத்த பரிசு பணம் மூலம் மகளின் எம்.பி.பி.எஸ். படிக்க வேண்டும் என்ற கனவை நிறைவேற்றுவேன் என்று கூறினார்.
லாரி டிரைவரான எனக்கு, மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். மூத்த மகளுக்கு எம்.பி.பி.எஸ் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கான படிப்பு செலவிற்கு கடன் கேட்டு வங்கியில் விண்ணப்பித்தேன். இதற்காக வீட்டையும் அடமானம் வைத்தேன். 6 மாத அலைக்கழிப்பிற்கு பிறகு கடந்த வாரம்தான் ரூ.15 லட்சம் கடன் கிடைத்தது.
அந்த பணத்தை வாங்கும் முன்பு லாட்டரியில் முதல் பரிசு ரூ.80 லட்சம் விழுந்துள்ளது. அந்த பரிசு சீட்டை கடன் வாங்கிய வங்கியிலேயே டெபாசிட் செய்வேன். என் மகளின் எம்.பி.பி.எஸ். படிப்பு கனவை இதன் மூலம் நிறைவேற்றுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கேரள மாநிலம் குதிரை குளம் பகுதியைச் சேர்ந்தவர் விஜிகுமார் (வயது 46). டிப்பர் லாரி டிரைவர்.
விஜிகுமார் ஓட்டிய லாரியின் உரிமையாளர் மோகனுடன் சேர்ந்து இருவரும் தனித்தனியாக கேரள அரசு லாட்டரி சீட்டு வாங்கி இருந்தனர்.
லாரி உரிமையாளர் மோகன் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்து இருக்கிறதா? என்பதை பார்க்க சென்றபோது லாரி டிரைவர் விஜிகுமாருக்கு லாட்டரியில் முதல் பரிசான ரூ.80லட்சம் விழுந்திருப்பது தெரிய வந்தது.
லாரி உரிமையாளர் மோகன், இத்தகவலை டிரைவர் விஜிகுமாருக்கு தெரிவித்தார். அவர், மகிழ்ச்சியில் திக்குமுக்காடினார். லாட்டரியில் கிடைத்த பரிசு பணம் மூலம் மகளின் எம்.பி.பி.எஸ். படிக்க வேண்டும் என்ற கனவை நிறைவேற்றுவேன் என்று கூறினார்.
லாரி டிரைவரான எனக்கு, மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். மூத்த மகளுக்கு எம்.பி.பி.எஸ் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கான படிப்பு செலவிற்கு கடன் கேட்டு வங்கியில் விண்ணப்பித்தேன். இதற்காக வீட்டையும் அடமானம் வைத்தேன். 6 மாத அலைக்கழிப்பிற்கு பிறகு கடந்த வாரம்தான் ரூ.15 லட்சம் கடன் கிடைத்தது.
அந்த பணத்தை வாங்கும் முன்பு லாட்டரியில் முதல் பரிசு ரூ.80 லட்சம் விழுந்துள்ளது. அந்த பரிசு சீட்டை கடன் வாங்கிய வங்கியிலேயே டெபாசிட் செய்வேன். என் மகளின் எம்.பி.பி.எஸ். படிப்பு கனவை இதன் மூலம் நிறைவேற்றுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X