search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றம்
    X
    பாராளுமன்றம்

    பாராளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

    மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளை கைவிட வலியுறுத்தி திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் இன்று பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுடெல்லி:

    முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, அதற்கு பதிலாக எம்பிபிஎஸ் இறுதியாண்டில் நெக்ஸ்ட் என்ற பெயரில் பொதுவான தேர்வாக நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. 

    இந்த விவகாரத்தில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பாராளுமன்ற வளாகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளை கைவிடக் கோரி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். கோரிக்கை அடங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

    Next Story
    ×