search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாட்ஸ்அப்
    X
    வாட்ஸ்அப்

    கேரளாவில் அரசு ஊழியர்களின் வாட்ஸ்-அப் குரூப்பில் செக்ஸ் படங்கள்: பெண் ஊழியர்கள் அதிர்ச்சி

    கேரளாவில் அரசு ஊழியர்களின் வாட்ஸ்-அப் குரூப்பில் பதிவிடப்பட்ட செக்ஸ் படங்களால் பெண் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் அரசு ஊழியர்கள் தங்களுக்கென வாட்ஸ்-அப் குரூப் தொடங்கி உள்ளனர்.

    திருவனந்தபுரம் தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வாட்ஸ்-அப் குரூப் ஒன்று உருவாக்கி அதில் தங்கள் பணி குறித்த தகவல்களை பரிமாறி வந்தனர்.

    மேலும் அரசு ஊழியர்களின் சங்க செயல்பாடுகள், அது தொடர்பான கூட்டங்கள், அதில் எடுக்கப்படும் தீர்மானங்கள் போன்றவற்றையும் வாட்ஸ்-அப்பில் பதிவிட்டு வந்தனர்.

    இந்த வாட்ஸ்-அப் குரூப்பின் அட்மின்னாக சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள் இருந்து வந்தனர். அவர்கள் 2 நாட்களுக்கு முன்பு சங்க செயல்பாடுகள் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தனர்.

    வாட்ஸ்அப் படங்கள்


    அப்போது சங்கத்தின் வாட்ஸ்-அப் குரூப்பில் ஏராளமான செக்ஸ் படங்கள் அடுத்தடுத்து பதிவிடப்பட்டன. இதைக்கண்ட பெண் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் செக்ஸ் படம் பதிவிடப்பட்டு இருப்பது பற்றி சங்க நிர்வாகிகளிடம் புகார் கூறினர்.

    சங்க நிர்வாகியும், குரூப் அட்மினுமானவர் இதுபற்றி விசாரித்து உடனே நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அந்த படங்களை குரூப்பில் இருந்து நீக்குவதாகவும் உறுதி அளித்தார்.

    பின்னர் அவர், வாட்ஸ்-அப் குரூப்பில் இது பற்றி தகவல் பதிவிட்டார். அதில் சங்க உறுப்பினர் ஒருவரின் செல்போன், தொலைந்து விட்டதாகவும், அந்த செல்போனை எடுத்தவர் அதில் செக்ஸ் படங்களை பதிவேற்றியதாகவும் கூறி இருந்தார்.

    ஆனால் அவர் செக்ஸ் படங்களை பதிவேற்றியவரை பாதுகாக்க தவறான தகவலை பதிவிட்டது தெரிய வந்தது. இதையடுத்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு இப்பிரச்சனை கொண்டு செல்லப்பட்டது. அவர்கள் வாட்ஸ்-அப் குரூப்பின் அட்மின் பொறுப்பில் இருந்து அவரை நீக்கினர்.
    Next Story
    ×