என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காலவிரயமாக்கி ஆட்சியை காப்பாற்ற முயற்சி- எடியூரப்பா குற்றச்சாட்டு
Byமாலை மலர்19 July 2019 2:18 AM GMT (Updated: 19 July 2019 2:18 AM GMT)
காலவிரயமாக்கி ஆட்சியை காப்பாற்ற முயற்சி செய்வதாக கூட்டணி கட்சிகள் மீது எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா குற்றம்சாட்டினார்.
பெங்களூ :
எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா விதான சவுதாவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஜனநாயகத்திற்கு அவமரியாதையை ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) உறுப்பினர்கள் நடந்து கொண்டனர். தேவை இல்லாமல் இந்த சபையின் நேரத்தை விரயமாக்கி, அரசை காப்பாற்ற கூட்டணி கட்சியினர் முயற்சி செய்கிறார்கள். நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே (நேற்று) நடத்துமாறு சபாநாயகருக்கு கவர்னர் தகவல் அனுப்பினார்.
அதுபற்றி முடிவை அறிவிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கேட்டோம். அதற்கு எந்த பதிலும் எங்களுக்கு கிடைக்கவில்லை. பெரும்பான்மையை இழந்துவிட்ட பிறகும் குமாரசாமி ஆட்சி அதிகாரத்தில் வெட்கம் இல்லாமல் நீடிக்கிறார். எங்கள் கட்சிக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணிக்கு 99 உறுப்பினர்கள் தான் உள்ளனர்.
சபையில் பா.ஜனதா உறுப்பினர்களின் கோபத்தை தூண்டிவிட கூட்டணி கட்சியினர் முயற்சி செய்கிறார்கள். கூட்டணி அரசின் மோசமான செயல்பாடுகளை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். பெரும்பான்மை இல்லாதபோதும், ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். நாளை (இன்று) என்ன நடக்கிறது என்பதை பார்க்கிறோம்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா விதான சவுதாவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஜனநாயகத்திற்கு அவமரியாதையை ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) உறுப்பினர்கள் நடந்து கொண்டனர். தேவை இல்லாமல் இந்த சபையின் நேரத்தை விரயமாக்கி, அரசை காப்பாற்ற கூட்டணி கட்சியினர் முயற்சி செய்கிறார்கள். நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே (நேற்று) நடத்துமாறு சபாநாயகருக்கு கவர்னர் தகவல் அனுப்பினார்.
அதுபற்றி முடிவை அறிவிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கேட்டோம். அதற்கு எந்த பதிலும் எங்களுக்கு கிடைக்கவில்லை. பெரும்பான்மையை இழந்துவிட்ட பிறகும் குமாரசாமி ஆட்சி அதிகாரத்தில் வெட்கம் இல்லாமல் நீடிக்கிறார். எங்கள் கட்சிக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணிக்கு 99 உறுப்பினர்கள் தான் உள்ளனர்.
சபையில் பா.ஜனதா உறுப்பினர்களின் கோபத்தை தூண்டிவிட கூட்டணி கட்சியினர் முயற்சி செய்கிறார்கள். கூட்டணி அரசின் மோசமான செயல்பாடுகளை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். பெரும்பான்மை இல்லாதபோதும், ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். நாளை (இன்று) என்ன நடக்கிறது என்பதை பார்க்கிறோம்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X