search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
    X
    காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

    பாராளுமன்றத்தின் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு

    பாராளுமன்றத்தின் அதிகாரங்களை மத்திய அரசு பறிப்பது சரியல்ல என காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் நேற்று நிதி மசோதா மீதான விவாதத்தை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தொடங்கி வைத்து பேசினார்.

    அவர் பேசியதாவது:-

    இந்த நிதி மசோதாவில் உள்ள பட்ஜெட் தொடர்பான 18 சட்டங்கள், வரியுடன் தொடர்பில்லாதவை. இப்படி தனது அதிகார வரம்புக்குள் வராத சட்டங்களில் திருத்தம் செய்யும் நிதி மசோதாவை எதிர்க்கிறோம்.

    இப்படி பாராளுமன்றத்தின் அதிகாரங்களை மத்திய அரசு பறிப்பது சரியல்ல. இந்திய பொருளாதாரம் ஒழுங்கின்றி உள்ளது. வேலைவாய்ப்பு விகிதம் குறைவாக உள்ளது. நீங்கள் நல்ல வட்டத்துக்குள் நுழைகிறீர்களா? கெட்ட வட்டத்துக்குள் நுழைகிறீர்களா? என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×