என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லி ஐகோர்ட்டில் ராபர்ட் வதேரா மனு வாபஸ்
Byமாலை மலர்18 July 2019 8:13 PM GMT (Updated: 18 July 2019 8:13 PM GMT)
டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெறுவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கணவர் ராபர்ட் வதேரா தரப்பில் கூறப்பட்டது.
புதுடெல்லி:
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கணவர் ராபர்ட் வதேரா மீது சட்ட விரோத பண பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது.
லண்டன் பிரையன்ஸ்டன் சதுக்கத்தில் 1.9 மில்லியன் பவுண்ட் மதிப்பில் (சுமார் ரூ.16 கோடியே 34 லட்சம்) வீடு வாங்கியதில், சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்துள்ளார் என்று இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆனால் தன்மீது அமலாக்கப்பிரிவு வலுக்கட்டாயமாக நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும் என்று ராபர்ட் வதேரா டெல்லி ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
இதற்கிடையே, விசாரணை நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி விட்டதால், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெறுவதாக நேற்று ராபர்ட் வதேரா தரப்பில் கூறப்பட்டது.
அதற்கு அனுமதி அளித்த நீதிபதிகள் மன்மோகன், சங்கீதா திங்க்ரா சேகல் ஆகியோர், அவருக்கு ஏற்கனவே முன்ஜாமீன் வழங்கப்பட்டு விட்டதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தனர்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கணவர் ராபர்ட் வதேரா மீது சட்ட விரோத பண பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது.
லண்டன் பிரையன்ஸ்டன் சதுக்கத்தில் 1.9 மில்லியன் பவுண்ட் மதிப்பில் (சுமார் ரூ.16 கோடியே 34 லட்சம்) வீடு வாங்கியதில், சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்துள்ளார் என்று இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆனால் தன்மீது அமலாக்கப்பிரிவு வலுக்கட்டாயமாக நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும் என்று ராபர்ட் வதேரா டெல்லி ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
இதற்கிடையே, விசாரணை நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி விட்டதால், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெறுவதாக நேற்று ராபர்ட் வதேரா தரப்பில் கூறப்பட்டது.
அதற்கு அனுமதி அளித்த நீதிபதிகள் மன்மோகன், சங்கீதா திங்க்ரா சேகல் ஆகியோர், அவருக்கு ஏற்கனவே முன்ஜாமீன் வழங்கப்பட்டு விட்டதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X