என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜிப்மர்-எய்ம்ஸ் கல்லூரிகளுக்கும் ‘நீட்’ மூலம் மாணவர்கள் தேர்வு
Byமாலை மலர்18 July 2019 10:23 AM GMT (Updated: 18 July 2019 10:23 AM GMT)
புதுவை ஜிப்மர், எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி, சண்டிகாரில் உள்ள உயர் மருத்துவ கல்லூரிகளுக்கான மாணவர்கள் தேர்வையும் நீட் மூலமாகவே நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி:
நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு அகில இந்திய அளவிலான நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
நீட் தேர்வு என அழைக்கப்படும் இந்த தேர்வை எழுதி வெற்றி பெற்றால் மட்டுமே மாணவர்கள் கல்லூரிகளில் சேர முடியும்.
அனைத்து மாநிலங்களும் தங்கள் மாநிலத்தில் இருக்கும் மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வு தரவரிசை அடிப்படையில் மாணவர்களை தேர்வு செய்கின்றனர்.
அதே நேரத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான புதுவை ஜிப்மர், எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி, சண்டிகாரில் உள்ள உயர் மருத்துவ கல்லூரி ஆகியவற்றுக்கு தனியாக மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்த 3 கல்லூரிகளும் தன்னாட்சி கல்லூரிகளாக இருப்பதால் அவை தனியாக நுழைவுத்தேர்வை நடத்தி மாணவர்களை தேர்வ செய்கின்றன. ஆனால், இதில் சில தவறுகள் நடப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
எனவே, 3 கல்லூரிகளுக்கான மாணவர்கள் தேர்வையும் நீட் மூலமாகவே நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான சட்ட மசோதா உருவாக்கப்பட உள்ளது. தேசிய மருத்துவ கமிஷன் இதன் சட்ட முன்வடிவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. அது நிறைவேற்றப்பட்டதும் ஜிப்மர் உள்ளிட்ட 3 கல்லூரிகளுக்கும் நீட் மூலமாகவே தேர்வை நடத்தி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு அகில இந்திய அளவிலான நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
நீட் தேர்வு என அழைக்கப்படும் இந்த தேர்வை எழுதி வெற்றி பெற்றால் மட்டுமே மாணவர்கள் கல்லூரிகளில் சேர முடியும்.
அனைத்து மாநிலங்களும் தங்கள் மாநிலத்தில் இருக்கும் மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வு தரவரிசை அடிப்படையில் மாணவர்களை தேர்வு செய்கின்றனர்.
அதேபோல் மத்திய அரசுக்கான மருத்துவ ஒதுக்கீட்டுக்கும் நீட் மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்த 3 கல்லூரிகளும் தன்னாட்சி கல்லூரிகளாக இருப்பதால் அவை தனியாக நுழைவுத்தேர்வை நடத்தி மாணவர்களை தேர்வ செய்கின்றன. ஆனால், இதில் சில தவறுகள் நடப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
எனவே, 3 கல்லூரிகளுக்கான மாணவர்கள் தேர்வையும் நீட் மூலமாகவே நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான சட்ட மசோதா உருவாக்கப்பட உள்ளது. தேசிய மருத்துவ கமிஷன் இதன் சட்ட முன்வடிவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. அது நிறைவேற்றப்பட்டதும் ஜிப்மர் உள்ளிட்ட 3 கல்லூரிகளுக்கும் நீட் மூலமாகவே தேர்வை நடத்தி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X