search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சந்திராயன்-2
    X
    சந்திராயன்-2

    ஜூலை 22-ம் தேதி விண்ணில் பாய்கிறது சந்திராயன்2 - இஸ்ரோ அறிவிப்பு

    தொழில் நுட்பக் கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட சந்திராயன்-2 விண்கலம் ஜூலை 22-ம் தேதி விண்ணில் செலுத்த உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
    நிலவின் தென் துருவ பகுதியில் ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ‘இஸ்ரோ’ மேற்கொண்டுள்ள கனவு திட்டம், ‘சந்திராயன்-2’ ஆகும்.

    இந்த ‘சந்திராயன்-2’ விண்கலத்தை ‘ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3’ ராக்கெட் மூலம் கடந்த 15-ந் தேதி அதிகாலை 2.51 மணிக்கு சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்துவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

    இந்நிலையில் கோளாறு காரணமாக சந்திராயன்-2 விண்கலத்தை விண்ணில் பறக்க விடுவது நிறுத்தப்பட்டது. இதனையடுத்து செப்டம்பர் மாதம் தான் அதை விண்ணில் செலுத்த முடியும் என்று கூறப்பட்டது. ஆனால் இதுபற்றி இஸ்ரோ விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வமாக எதுவும் சொல்லாமல் இருந்தனர்.

    தற்போது ராக்கெட்டில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறை விஞ்ஞானிகளும், என்ஜினீயர்களும் இணைந்து பணியாற்றி சரி செய்து விட்டதாக ‘இஸ்ரோ’ வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்த நிலையில் சந்திராயன்-2 ஜூலை 22-ம் தேதி விண்ணில் செலுத்த உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
    Next Story
    ×