search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீர்ப்பை கொண்டாடிய உறவினர்கள்
    X
    தீர்ப்பை கொண்டாடிய உறவினர்கள்

    சர்வதேச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கொண்டாடிய குல்பூஷன் ஜாதவ் கிராமம்

    குல்பூஷன் ஜாதவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்ற தடை விதித்து சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மகாராஷ்டிராவில் உள்ள அவரது கிராமத்தினர் கொண்டாடி மகிழ்ந்தனர்.
    மும்பை:

    குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும். ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.



    இந்நிலையில், குல்பூஷன் ஜாதவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்ற தடை விதித்து சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மகாராஷ்டிராவில் உள்ள அவரது கிராமத்தினர் கொண்டாடினர். அவர்களது உறவினரும், நண்பர்களும் வண்ண வண்ண பலூன்களை பறக்கவிட்டும், இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.

    விரைவில் அவரை விடுதலை செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
    Next Story
    ×