search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி கோவில்
    X
    திருப்பதி கோவில்

    திருப்பதியில் வி.ஐ.பி. தரிசனம் முழுமையாக ரத்தாகிறது

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
    திருப்பதி:

    திருப்பதி கோவிலில் முக்கிய பிரமுகர்களுக்கு தேவஸ்தானம் வி.ஐ.பி. தரிசனத்தை வழங்கி வருகிறது.

    இதில் எல்-1, எல்-2, எல்-3 என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வி.வி.ஐ.பி.க்கள், வி.ஐ.பி.க்கள் என தரிசனத்திற்கு அனுப்பப்படுகிறது.

    இதை எதிர்த்தும், அனைத்து பக்தர்களையும் சமமாக நடத்துமாறு தேவஸ்தானத்துக்கு உத்தரவிடக் கோரியும் ஐதராபாத்தை சேர்ந்த உமேஷ் சந்திரா என்பவர், அமராவதியில் உள்ள ஆந்திர ஐகோர்ட்டில் கடந்த வாரம் மனுத்தாக்கல் செய்தார்.

    அதன் மீதான விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது வி.ஐ.பி. தரிசனம் தொடர்பான அரசானை நகலை சமர்ப்பிக்குமாறு ஆந்திர அரசிற்கும், தேவஸ்தானத்துக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அந்த வழக்கு விசாரணை நேற்று முன்தினம் நடந்தது.

    தேவஸ்தானம் சார்பில் வி.ஐ.பி. தரிசனம் குறித்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பாரெட்டி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை ரத்து செய்ய உள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்தார்.

    இதைக் கேட்ட நீதிபதிகள், புதிய அறங்காவலர் குழு அமைக்கப்படாமல், அதன் தலைவரது அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. இது குறித்து அரசாணை நகலை சமர்ப்பிக்க வேண்டும். வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை ரத்து செய்துவிட்டு, வேறு பெயரில் தரிசனம் வழங்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. அதனால் இது குறித்து முழு விவரங்களையும் நாளை வியாழக்கிழமை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.

    திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக சுப்பாரெட்டி பொறுப்பெற்றவுடன், வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை ரத்து செய்ய உள்ளதாகவும், முக்கிய பிரமுகர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து வி.ஐ.பி. தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

    கடந்த 9 ஆண்டுகளுக்கு முன், திருமலை செயல் இணை அதிகாரியாக சீனிவாச ராஜு பொறுப்பேற்ற பின் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் எல்-1, 2, 3 என 3 பிரிவுகள் கொண்டு வரப்பட்டன. அதற்கு முன் வரை அனைத்து பக்தர்களுக்கும் தரிசனத்தில் சமவாய்ப்பே தரப்பட்டது.

    தர்மா ரெட்டி தேவஸ்தனா சிறப்பு அதிகாரியாக இருந்தபோது தரிசன முறைகளை மாற்றி அமைத்தார். தற்போது அவர் மீண்டும் சிறப்பு அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார். அதனால் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் கட்டாயம் மாற்றம் கொண்டு வரப்படும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

    வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கு எதிரொலியாக தேவஸ்தானம் தற்போது எல்-1 பிரிவின் கீழ் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு தற்போது தீர்த்தம் வழங்குவது மற்றும் சடாரி வைக்கும் சடங்கு கோவிலுக்கு வெளியில் நடத்தப்படுகிறது. எல்-2 பிரிவின் கீழ் ராமுலவாரி மேடை வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். எல்-3 பிரிவின் கீழ் (ஜெய, விஜயர்கள் அமைந்துள்ள பகுதி வரை) அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×