என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
‘நோ பார்க்கிங்’ பகுதியில் காரை நிறுத்திய மும்பை மேயருக்கு அபராதம்
Byமாலை மலர்16 July 2019 7:57 PM GMT (Updated: 16 July 2019 7:57 PM GMT)
போக்குவரத்து விதியை மீறி ‘நோ பார்க்கிங்’ பகுதியில் காரை நிறுத்திய மும்பை மேயர் விஸ்வநாத் மகாதேஷ்வருக்கு மும்பை போலீசார் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கையை எடுத்தனர்.
மும்பை:
மும்பையில் பல சாலைகளில் வாகன நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஆனால் அதன் அருகில் ‘நோ பார்க்கிங்’ பகுதியில் வாகனம் நிறுத்தினால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கும் திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது.
இந்தநிலையில் வில்லேபார்லே- அந்தேரி இடையே உள்ள கோல்டோங்கிரியில் ‘நோ பார்க்கிங்’ பகுதியில் மும்பை மேயர் விஸ்வநாத் மகாதேஷ்வரின் கார் நிறுத்தப்பட்டு இருந்தது. விதிமுறை மீறும் வாகன ஓட்டிகளிடம் மாநகராட்சி மிகப்பெரிய தொகையை அபராதமாக வசூலித்து வரும் நிலையில் மும்பை மேயரின் காரே ‘நோ பார்க்கிங்’ பகுதியில் நிறுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
தான் ஓட்டலில் சாப்பிட சென்றபோது, அது நோ பார்க்கிங் பகுதி என கவனிக்காமல் தனது டிரைவர் அங்கு காரை நிறுத்தி விட்டார். இது தவறு தான் என்று மேயர் விஸ்வநாத் மகாதேஷ்வர் ஒப்புக்கொண்டார்.
இதற்கிடையே போக்குவரத்து விதியை மீறிய மேயருக்கு மும்பை போலீசார் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கையை எடுத்தனர். இது தொடர்பாக அவருக்கு இ-செல்லான் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் மதுக்கர் பாண்டே தெரிவித்தார்.
மும்பையில் பல சாலைகளில் வாகன நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஆனால் அதன் அருகில் ‘நோ பார்க்கிங்’ பகுதியில் வாகனம் நிறுத்தினால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கும் திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது.
இந்தநிலையில் வில்லேபார்லே- அந்தேரி இடையே உள்ள கோல்டோங்கிரியில் ‘நோ பார்க்கிங்’ பகுதியில் மும்பை மேயர் விஸ்வநாத் மகாதேஷ்வரின் கார் நிறுத்தப்பட்டு இருந்தது. விதிமுறை மீறும் வாகன ஓட்டிகளிடம் மாநகராட்சி மிகப்பெரிய தொகையை அபராதமாக வசூலித்து வரும் நிலையில் மும்பை மேயரின் காரே ‘நோ பார்க்கிங்’ பகுதியில் நிறுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கிடையே போக்குவரத்து விதியை மீறிய மேயருக்கு மும்பை போலீசார் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கையை எடுத்தனர். இது தொடர்பாக அவருக்கு இ-செல்லான் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் மதுக்கர் பாண்டே தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X