search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடிகை அருணிமா கோஷ்
    X
    நடிகை அருணிமா கோஷ்

    சமூக வலைத்தளத்தில் நடிகையை தகாத வார்த்தைகளால் திட்டிய ஆசாமி கைது

    சமூக வலைத்தளத்தில் பெங்காலி நடிகையை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியதாக கொல்கத்தாவைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் வசித்து வருபவர் அருணிமா கோஷ். பெங்காலி நடிகையான இவரது சமூக வலைத்தளத்தை ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். சினிமா தொடர்பாகவும், அவர் நடித்த படங்கள் மற்றும் அவரது நடிப்பு தொடர்பாகவும் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், கடந்த மே மாதம் 30ம் தேதி முதல் ஒரு நபர், அருணிமா கோஷின் வலைத்தளத்தில் தொடர்ந்து மோசமான வகையில் கருத்துக்களை பதிவு செய்துள்ளார். அருணிமா கோஷை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியிருக்கிறார். 

    இதுதொடர்பாக அருணா கோஷ் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அருணா கோஷின் வலைத்தளத்தில் மோசமான கருத்துக்களை பதிவிட்டது, தெற்கு கொல்கத்தாவின் கர்பா பகுதியைச் சேர்ந்த முகேஷ் ஷா என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். 

    அவர், முகேஷ் மாயுக் என்ற பெயரில் போலியாக கணக்கு தொடங்கி இவ்வாறு நடந்துகொண்டுள்ளார். ஏன் இவ்வாறு செய்தார்? அவருக்கு ஏதேனும் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×