என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாரதா நிதி நிறுவன ஊழல் - திரிணாமுல் கட்சி முன்னாள் எம்.பி.க்கு சம்மன்
Byமாலை மலர்15 July 2019 10:15 AM GMT
சாரதா சிட்பண்ட் நிதி நிறுவன மோசடி தொடர்பாக நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. குணால் கோஷுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
கொல்கத்தா:
கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சாரதா சிட்பண்ட் நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் டெபாசிட் செய்த பணத்தில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது.
இந்த மோசடி பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. சுதிப்தா சென் உள்பட சாரதா சிட்பண்ட் நிதி நிறுவன அதிபர்கள், இயக்குனர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த மோசடியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, சாரதா நிறுவனத்தின் ஊடகப் பிரிவு தலைவராக செயல்பட்டு வந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. குணால் கோஷ் கைது செய்யப்பட்டு கடந்த 2016- ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் தற்கொலைக்கு முயன்று உயிர் பிழைத்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சுமார் இரண்டாண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த குணால் கோஷை கட்சியில் இருந்து நீக்கம்செய்து மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி உத்தரவிட்டார். பின்னர் ஜாமீனில் விடுதலையான குணால் கோஷ் சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கை எதிர்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு குணால் கோஷுக்கு பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சம்மன் அனுப்பியுள்ளனர்.
கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சாரதா சிட்பண்ட் நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் டெபாசிட் செய்த பணத்தில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது.
இந்த மோசடி பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. சுதிப்தா சென் உள்பட சாரதா சிட்பண்ட் நிதி நிறுவன அதிபர்கள், இயக்குனர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த மோசடியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, சாரதா நிறுவனத்தின் ஊடகப் பிரிவு தலைவராக செயல்பட்டு வந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. குணால் கோஷ் கைது செய்யப்பட்டு கடந்த 2016- ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் தற்கொலைக்கு முயன்று உயிர் பிழைத்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு குணால் கோஷுக்கு பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சம்மன் அனுப்பியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X