search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிக்-டாக் செயலி
    X
    டிக்-டாக் செயலி

    டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு ஆர்.எஸ்.எஸ். கடிதம்

    இந்தியாவில் ‘டிக்-டாக்’ செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் அஷ்வானி மகாஜன் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் ‘டிக்-டாக்’ செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பு இயக்கமான சுதேசி பாதுகாப்பு இயக்கத்தின் (சுதேசி ஜக்ரான் மஞ்ச்) இணை ஒருங்கிணைப்பாளர் அஷ்வானி மகாஜன் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

    அந்த கடிதத்தில், ‘டிக்-டாக்’, ‘ஹலோ’ ஆகிய செயலிகளில், நம் தேசத்துக்கு எதிரான கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, ‘டிக்-டாக்’ மற்றும் ‘ஹலோ’ உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும். சில சீன நிறுவனங்கள், தவறான கருத்துகளை பரப்பி இந்திய இறையாண்மை மற்றும் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சி செய்கின்றன. எனவே நமது தேச பாதுகாப்பை, பாதுகாக்க கடுமையான சட்டங்கள் இயற்றி இதுபோன்ற செயலிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
    Next Story
    ×