search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணுவ வீரரிடம் ஜோதி ஒப்படைப்பு
    X
    ராணுவ வீரரிடம் ஜோதி ஒப்படைப்பு

    கார்கில் வெற்றி ஜோதி பயணம் - ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்

    கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் ‘கார்கில் வெற்றி ஜோதி’யை ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் இன்று ஏற்றி வைத்தார்.
    புதுடெல்லி:

    காஷ்மீர் எல்லைப்பகுதியான கார்கிலில் கடந்த 1999-ம் ஆண்டு ஊடுருவிய பாகிஸ்தான் படைகளை விரட்டியடிக்க இந்தியா தாக்குதல் நடத்தியது. இரு நாடுகளுக்கும் இடையே இரண்டு மாதங்கள் மற்றும் மூன்று வாரங்களுக்கு நடந்த இந்த போரின் இறுதியில் பாகிஸ்தான் ஆக்கிரமித்த அனைத்து பகுதிகளையும் இந்தியா மீட்டது. 

    சிறப்பு வாய்ந்த இந்த கார்கில் போரில் இந்தியா 527 வீரர்களை தியாகம் செய்தது. 1,863 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். ஆனால், பாகிஸ்தான் தரப்பில் 4 ஆயிரம் பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
    வெற்றி ஜோதியின் பயணம் தொடங்கியது
    இந்த போர் முடிவுக்கு வந்த ஜூலை 26-ம் தேதியை ‘கார்கில் வெற்றி தினமாக’ ஆண்டுதோறும் இந்தியா கொண்டாடி வருகிறது. அந்த வகையில் 20-வது கார்கில் வெற்றி தினம் வரும் 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் ‘கார்கில் வெற்றி ஜோதி’யை ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் இன்று ஏற்றி வைத்தார்.  காஷ்மீர் உள்பட 11 முக்கிய நகரங்களின் வழியாக கொண்டு செல்லப்படும் கார்கில் ஜோதி வரும் 26-ம் தேதி டெல்லியில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் ஒளிர்ந்துக் கொண்டிருக்கும் ’அணையாஜோதி’யுடன் சங்கமமாக்கப்படும்.
    Next Story
    ×