search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேடுதல் பணியில் போலீசார்
    X
    தேடுதல் பணியில் போலீசார்

    சத்தீஸ்கர் - போலீசார் நடத்திய என்கவுண்டரில் 2 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

    சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டேவாடாவில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் 2 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள குமியாபத் பகுதியில் நக்சல்கள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
     
    இந்த என்கவுண்டரில் 2 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவரிடம் இருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். 
    Next Story
    ×