என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரூ.25 லட்சம் இருந்த ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கி சென்ற கொள்ளையர்கள்
Byமாலை மலர்13 July 2019 7:50 PM GMT (Updated: 13 July 2019 7:50 PM GMT)
மராட்டிய மாநிலத்தில் ரூ.25 லட்சம் இருந்த ஏ.டி.எம். எந்திரத்தை கொள்ளையர்கள் தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவுரங்காபாத்:
மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில், பீட் பைபாஸ் சாலையில் உள்ள துத்தா மந்திர் எதிரே பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. இந்த மையத்தில் 2 ஏ.டி.எம். எந்திரங்கள் இருந்தன. இந்த நிலையில் நேற்று அதிகாலை 1 மணி அளவில் மர்ம ஆசாமிகள் சிலர் ஜீப்பில் அங்கு வந்தனர். அவர்கள் மையத்துக்குள் நுழைந்து ஒரு ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்து எடுத்து ஜீப்பில் ஏற்றினர்.
கொள்ளையின் போது அந்த ஏ.டி.எம். மையத்தின் கண்ணாடிகள் உடைந்துள்ளது. இந்த சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த அந்த பகுதியை சேர்ந்த சிலர் விரைந்து வந்து பார்த்தனர். அதற்குள் கொள்ளை ஆசாமிகள் அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது. ஏ.டி.எம். மையத்தின் கண்ணாடிகள் உடைந்து கிடந்ததையும், அங்கு இருந்த ஒரு எந்திரம் மாயமானதையும் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அறிந்த பண்டலிக் நகர் போலீசார் விரைந்து வந்தனர். கொள்ளையர்கள் தூக்கி சென்ற ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.25 லட்சம் இருந்தது தெரியவந்தது. கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில், பீட் பைபாஸ் சாலையில் உள்ள துத்தா மந்திர் எதிரே பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. இந்த மையத்தில் 2 ஏ.டி.எம். எந்திரங்கள் இருந்தன. இந்த நிலையில் நேற்று அதிகாலை 1 மணி அளவில் மர்ம ஆசாமிகள் சிலர் ஜீப்பில் அங்கு வந்தனர். அவர்கள் மையத்துக்குள் நுழைந்து ஒரு ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்து எடுத்து ஜீப்பில் ஏற்றினர்.
கொள்ளையின் போது அந்த ஏ.டி.எம். மையத்தின் கண்ணாடிகள் உடைந்துள்ளது. இந்த சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த அந்த பகுதியை சேர்ந்த சிலர் விரைந்து வந்து பார்த்தனர். அதற்குள் கொள்ளை ஆசாமிகள் அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது. ஏ.டி.எம். மையத்தின் கண்ணாடிகள் உடைந்து கிடந்ததையும், அங்கு இருந்த ஒரு எந்திரம் மாயமானதையும் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அறிந்த பண்டலிக் நகர் போலீசார் விரைந்து வந்தனர். கொள்ளையர்கள் தூக்கி சென்ற ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.25 லட்சம் இருந்தது தெரியவந்தது. கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X