என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நிலவின் தென் துருவத்தை சந்திராயன்-2 ஆராயும்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்
Byமாலை மலர்13 July 2019 5:30 AM GMT (Updated: 13 July 2019 5:30 AM GMT)
இன்னும் இரண்டு தினங்களில் அனுப்பப்பட உள்ள சந்திராயன்-2 விண்கலம் நிலவின் தென் துருவத்தை ஆராய உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.
திருப்பதி:
நிலவை ஆராய்வதற்காக நாளை மறுதினம் சந்திராயன்-2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அனுப்ப உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன. சந்திராயன்-2 விண்கலமானது விண்வெளித் துறையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், இஸ்ரோ தலைவர் சிவன், திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தார். அப்போது சந்திராயன்-2 திட்டம் வெற்றி பெற பிரார்த்தனை செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, சந்திராயன்-2 விண்கலம் இரண்டு மாதத்தில் நிலவின் தென்துருவத்தை ஆராயத் தொடங்கும் என்று குறிப்பிட்டார்.
“சந்திராயன்-2 விண்கலத்தை திங்கட்கிழமை அதிகாலை 2.51 மணியளவில் விண்ணில் செலுத்துவதற்கான பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. மழை பெய்தாலும், விண்கலம் ஏவப்படுவதில் எவ்வித பாதிப்பும் இருக்காது. மழையால் பாதிக்காத வகையில் விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணுக்கு மனிதனை அனுப்பம் திட்டம் 2022ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்பட உள்ளது” என்றும் இஸ்ரோ தலைவர் கூறினார்.
முன்னதாக, சந்திராயன்-2 கவுண்டவுன் தொடங்குவதற்கு முன்பு, உடுப்பியில் உள்ள கிருஷ்ண மடத்திற்கு, இஸ்ரோ தலைவர் சிவன் குடும்பத்தினருடன் சென்று சாமி தரிசனம் செய்தார். மடாதிபதியையும் சந்தித்து ஆசி பெற்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X