search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாலு பிரசாத் யாதவ்
    X
    லாலு பிரசாத் யாதவ்

    மாட்டு தீவன ஊழல்: டியோகர் கருவூல வழக்கில் லாலுவுக்கு ஜாமீன் கிடைத்தது

    பீகார் மாநிலத்தில் நடந்த மாட்டு தீவன ஊழல் விவகாரத்தில் டியோகர் கருவூலத்தில் இருந்து முறைகேடாக பணம் எடுத்த வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு இன்று ஜாமீன் கிடைத்தது.
    ராஞ்சி:

    ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத் யாதவ் பீகார் முதல்வராக இருந்த இவர் கால்நடை தீவன முறைகேட்டில் சிக்கினார். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் லாலு பிரசாத் யாதவ் மீது தொடரப்பட்டது. இதில் 3 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது.

    முதல் வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனையும், 2-வது வழக்கில் 3½ ஆண்டுகளும், 3-வது வழக்கில் 5 ஆண்டும் லாலுவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்ட அவர் தற்போது உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் நான்காவது வழக்காக தும்கா கருவூலத்தில் இருந்து ரூ.3.13 கோடி பணத்தை முறைகேடாக எடுத்தது தொடர்பான வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், லாலுபிரசாத் யாதவ் குற்றவாளி என்று கடந்த ஆண்டு மார்ச் 19-ம் தேதி நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

    குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. லாலுவுக்கு இந்திய குற்றவியல் சட்டத்தின்கீழ் 7 ஆண்டு மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் 7 ஆண்டு என மொத்தம் 14 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், 60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    இதைதொடர்ந்து சிறையில் தண்டனை அனுபவித்துவந்த லாலு பிரசாத் உடல்நலக்குறைவால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில், மாட்டு தீவன முறைகேட்டின் ஒருபகுதியாக பீகார் மாநிலத்தின் டியோகர் கருவூலத்தில் இருந்து பண மோசடி செய்த ஊழல் வழக்கில் லாலுவுக்கு ஜாமீன் அளித்து ஜார்கண்ட் உயர் நீதிமன்றம்  இன்று உத்தரவிட்டுள்ளது.
    Next Story
    ×