
தெலுங்கானா மாநிலத்தின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் தாசில்தாராக பணிபுரிபவர் லாவண்யா. இவர் ஐதராபாத்தின் ஹயாத்நகரில் வசித்து வருகிறார். லாவண்யா வேலை செய்யும் அலுவலகத்தில் அனந்தையா என்பவர் வி.ஆர்.ஓவாக பணிபுரிகிறார். இவர் விவசாயி ஒருவரிடம் ரூ.4 லட்சம் லஞ்சம் பெற்றபோது சிக்கினார்.
முன்னதாக அனந்தையா, பாஸ்கர் எனும் விவசாயியிடம் ரூ.8 லட்சம் லஞ்சம் கேட்டு, அதில் ரூ.5 லட்சம் தாசில்தாருக்கும், ரூ.3 லட்சம் தனக்கும் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதனையடுத்து அந்த விவசாயி அனந்தையாவுக்கு ரூ.4 லட்சம் வழங்கியுள்ளார். பணம் தன் கைக்கு வந்துவிட்டதாக அனந்தையா லாவண்யாவுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த பிழையை திருத்தி புதிய ஆவணங்கள் பெறுவதற்காக முறையிட்ட போதுதான், லஞ்சம் கேட்கப்பட்டுள்ளது. பாதிப் பணம் கொடுத்த நிலையில், ஊழல் தடுப்புப் பிரிவினரிடம் பாஸ்கர் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து தாசில்தார், லாவண்யாவிடம் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், தெலுங்கானாவின் சிறந்த தாசில்தார் என்ற விருதை, அம்மாநில அரசிடமிருந்து லாவண்யா பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.