search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிபிஐ சோதனை நடந்த வீடு.
    X
    சிபிஐ சோதனை நடந்த வீடு.

    சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்களின் வீடுகளில் சிபிஐ திடீர் சோதனை

    என்.ஜி.ஓ. அமைப்புக்கு வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் பணம் பெற்றதில் மோசடி நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்களின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    புதுடெல்லி:

    சுப்ரீம்கோர்ட்டில் மூத்த வழக்கறிஞர்களாக இருப்பவர்கள் ஆனந்த் குரோவர் மற்றும் அவரது மனைவி இந்திரா ஜெய்சிங்.

    இவர்கள் இருவரும் “லாயர்ஸ் கலெக்டிவ்” என்ற என்.ஜி.ஓ. அமைப்பை நடத்தி வருகிறார்கள்.

    இந்த என்.ஜி.ஓ. அமைப்புக்கு வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் பணம் வருகிறது. இந்த பணத்தை வக்கீல் தம்பதிகள் இருவரும் முறைகேடாக பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்தன.

    இந்திரா ஜெய்சிங்

    கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை அவர்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் பெறாமல் வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பணம் பெற்றதாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர்கள் இருவர் மீதும் புகார்கள் அளிக்கப்பட்டன.

    இதுபற்றி சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக வக்கீல்கள் ஆனந்த் குரோவர், இந்திரா ஜெய்சிங் வீடுகளில் சோதனை நடத்தினார்கள். அவர்களது அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

    டெல்லி, மும்பையில் உள்ள அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடந்தது. ஆனால் வக்கீல் தம்பதிகள் இருவரும் தங்கள் மீதான வெளிநாட்டு பணம் மோசடி குற்றச்சாட்டை மறுத்து உள்ளனர்.
    Next Story
    ×