என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தறிகெட்டு ஓடிய லாரி திருமண பந்தலுக்குள் புகுந்தது- 8 பேர் பலி
Byமாலை மலர்11 July 2019 4:18 AM GMT (Updated: 11 July 2019 4:18 AM GMT)
பீகார் மாநிலத்தில் தறிகெட்டு ஓடிய லாரி ஒன்று திருமண பந்தலுக்குள் புகுந்ததால், லாரியில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.
பீகார்:
பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டம், ஹல்சி பஜார் என்ற இடத்தில், நேற்று இரவு திருமண நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த லாரி ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து தற்கெட்டு ஓடியது. பின்னர் சாலையை விட்டு விலகிய அந்த லாரி, திருமண பந்தலுக்குள் புகுந்தது. இதனால், லாரியின் அடியில் பலர் சிக்கினர்.
இந்த கோர விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 6 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து ஏற்பட்டதும் லாரி டிரைவர் கீழே குதித்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டம், ஹல்சி பஜார் என்ற இடத்தில், நேற்று இரவு திருமண நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த லாரி ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து தற்கெட்டு ஓடியது. பின்னர் சாலையை விட்டு விலகிய அந்த லாரி, திருமண பந்தலுக்குள் புகுந்தது. இதனால், லாரியின் அடியில் பலர் சிக்கினர்.
இந்த கோர விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 6 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து ஏற்பட்டதும் லாரி டிரைவர் கீழே குதித்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X