என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஏமாற்றமான முடிவு - நமது வீரர்களின் போர்க்குணம் அருமை: உலகக் கோப்பை தோல்வி பற்றி மோடி கருத்து
Byமாலை மலர்10 July 2019 2:50 PM GMT (Updated: 10 July 2019 2:50 PM GMT)
உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா வெற்றிபெற இயலாமல் போனது ஏமாற்றமான முடிவு என்றாலும் நமது வீரர்களின் போர்க்குணம் அருமை என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லி:
உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து அணி முன்னேறியுள்ளது. இன்று நடந்த ஆட்டத்தை பல்வேறு தரப்பினரும் எதிர்மறையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா வெற்றிபெற இயலாமல் போனது ஏமாற்றமான முடிவு என்றாலும் ஆட்டத்தின் இறுதிவரை நமது வீரர்களின் போர்க்குணம் அருமையாக இருந்தது என பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆரம்பச்சுற்று போட்டிகளில் இருந்தே பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் ஆகியவற்றில் இந்தியா சிறப்பாக விளையாடியதை எண்ணி நாம் மிகவும் பெருமைப்படுகிறோம். வெற்றிகளும் தோல்விகளும் வாழ்க்கையின் ஒருபகுதியாகும். நமது அணியினரின் எதிர்கால பெருமுயற்சிகளுக்கு மனம்நிறைந்த நல்வாழ்த்துக்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X