என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெங்களூருவில் கட்டிடம் இடிந்து விபத்து- 4 பேர் உயிரிழப்பு
Byமாலை மலர்10 July 2019 9:19 AM GMT (Updated: 10 July 2019 9:19 AM GMT)
பெங்களூரில் கட்டுமானப் பணி நடைபெற்று வந்த குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம், பெங்களூரு புலிகேஷ் நகரில் குடியிருப்பு பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த ஒரு கட்டிடம் இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 4 வயது குழந்தை உள்பட 7 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சட்ட விதிகளை பின்பற்றாமல், கூடுதல் தளம் கட்டியதால் விபத்து ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இதுபோன்று, விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடித்து அகற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக மேயர் தெரிவித்தார். எதிர்காலத்தில் இதுபோன்று கட்டுமானங்களை கட்டுவோருக்கு அனுமதி வழங்குவதில் மிகவும் கவனமாக இருக்கும்படியும் அறிவுறுத்தி உள்ளார்.
கர்நாடக மாநிலம், பெங்களூரு புலிகேஷ் நகரில் குடியிருப்பு பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த ஒரு கட்டிடம் இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 4 வயது குழந்தை உள்பட 7 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சட்ட விதிகளை பின்பற்றாமல், கூடுதல் தளம் கட்டியதால் விபத்து ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இதுபோன்று, விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடித்து அகற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக மேயர் தெரிவித்தார். எதிர்காலத்தில் இதுபோன்று கட்டுமானங்களை கட்டுவோருக்கு அனுமதி வழங்குவதில் மிகவும் கவனமாக இருக்கும்படியும் அறிவுறுத்தி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X