என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆயுதக் கடத்தல்- ஊழல்: 19 மாநிலங்களில் சிபிஐ அதிரடி சோதனை
Byமாலை மலர்9 July 2019 9:52 AM GMT (Updated: 9 July 2019 10:30 AM GMT)
டெல்லி, மும்பை, மதுரை உள்பட நாடு முழுவதிலும் 110 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் தனித்தனிக் குழுவாகச் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி:
நாட்டின் முதன்மை புலனாய்வு அமைப்பான சிபிஐ, பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை விசாரித்து வருகிறது. புகார்களின் அடிப்படையில், குற்றம்சாட்டப்படும் நபர்களின் இடங்களில் சோதனை நடத்தி, வழக்கு தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி வருகின்றனர்.
இந்நிலையில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக சிபிஐ இன்று மெகா சோதனையை தொடங்கியது. நாடு முழுவதும் 19 மாநிலங்களில் 119 இடங்களில், சிபிஐ அதிகாரிகள் தனித்தனி குழுவாகச் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
டெல்லி, மும்பை, சண்டிகர், ஜம்மு, ஸ்ரீநகர், புனே, ஜெய்ப்பூர், கோவா, ராய்ப்பூர், ஐதராபாத், மதுரை, கொல்கத்தா, ரூர்கேலா, ராஞ்சி, பொகாரோ, லக்னோ, கான்பூர் உள்ளிட்ட நகரங்களிலும், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், ஒடிசா, இமாச்சல பிரதேசம், பஞ்சாப், அரியானா, ஆந்திரா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலும் இந்த சோதனை நடைபெறுகிறது.
ஊழல், ஆயுதக் கடத்தல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட புதிய வழக்குகள் தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், சோதனை நிறைவடைந்தபிறகுதான், வழக்குகள் தொடர்பான முழு விவரங்களும் வெளியிடப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதேபோல் வங்கி மோசடி தொடர்பாக சுமார் 50 இடங்களில் கடந்த 2-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் முதன்மை புலனாய்வு அமைப்பான சிபிஐ, பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை விசாரித்து வருகிறது. புகார்களின் அடிப்படையில், குற்றம்சாட்டப்படும் நபர்களின் இடங்களில் சோதனை நடத்தி, வழக்கு தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி வருகின்றனர்.
இந்நிலையில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக சிபிஐ இன்று மெகா சோதனையை தொடங்கியது. நாடு முழுவதும் 19 மாநிலங்களில் 119 இடங்களில், சிபிஐ அதிகாரிகள் தனித்தனி குழுவாகச் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
டெல்லி, மும்பை, சண்டிகர், ஜம்மு, ஸ்ரீநகர், புனே, ஜெய்ப்பூர், கோவா, ராய்ப்பூர், ஐதராபாத், மதுரை, கொல்கத்தா, ரூர்கேலா, ராஞ்சி, பொகாரோ, லக்னோ, கான்பூர் உள்ளிட்ட நகரங்களிலும், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், ஒடிசா, இமாச்சல பிரதேசம், பஞ்சாப், அரியானா, ஆந்திரா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலும் இந்த சோதனை நடைபெறுகிறது.
ஊழல், ஆயுதக் கடத்தல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட புதிய வழக்குகள் தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், சோதனை நிறைவடைந்தபிறகுதான், வழக்குகள் தொடர்பான முழு விவரங்களும் வெளியிடப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதேபோல் வங்கி மோசடி தொடர்பாக சுமார் 50 இடங்களில் கடந்த 2-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X