என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தெலுங்கானாவில் பாஜக உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் அமித்ஷா
Byமாலை மலர்6 July 2019 12:15 PM GMT (Updated: 6 July 2019 12:15 PM GMT)
பா.ஜ.க. நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு, தெலுங்கானாவில் கட்சி உறுப்பினர் சேர்க்கையை பா.ஜ.க. தலைவரும் உள்துறை மந்திரியுமான அமித்ஷா இன்று தொடங்கி வைத்தார்.
ஐதராபாத்:
பா.ஜ.க. நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதிலும் பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கையையை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டு, அதற்காக முகாம்களும் நடத்தப்படுகின்றன. இதில் அந்தந்த பகுதி பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்துகொண்டு, உறுப்பினர் சேர்க்கையை முன்னின்று நடத்தி வருகின்றனர்.
வாரணாசியில் இன்று நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். மேலும், வாரணாசியில் மரக்கன்று நடும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கையை அக்கட்சியின் தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித் ஷா இன்று மாலை தொடங்கி வைத்தார்.
இதற்காக ரெங்காரெட்டி மாவட்டம் சென்ற அமித்ஷா, அங்குள்ள பழங்குடியின பெண் வீட்டுக்கு சென்று மதிய உணவருந்தினார். அவருடன் முரளிதர் ராவ் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X