என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சத்தீஸ்கரில் பெண் உள்பட 4 மாவோயிஸ்டுகளை சுட்டு வீழ்த்திய அதிரடிப்படை
Byமாலை மலர்6 July 2019 9:50 AM GMT (Updated: 6 July 2019 9:50 AM GMT)
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு பெண் உள்ளிட்ட 4 மாவோயிஸ்டுகளை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டவிரோத செயல்கள் மற்றும் வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபடும் மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் பணியில் சிறப்பு அதிரடிப்படையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதேசமயம், மாவோயிஸ்டுகள் வன்முறைப் பாதையில் இருந்து விலகி, சரண் அடைந்தால் அவர்களின் மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.
இந்நிலையில், தம்தாரி மாவட்டம் கல்லாரி மற்றும் மேக்கா கிராமங்களுக்கு இடைப்பட்ட வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று காலையில் சிறப்பு அதிரடிப்படை போலீசார் அங்கு சென்று மாவோயிஸ்டுகளை சுற்றி வளைத்தனர். அப்போது இரு தரப்பினருக்குமிடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
அதிரடிப் படையினரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் மாவோயிஸ்டுகள் பின்வாங்கினர். இதையடுத்து அங்கு நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் ஒரு பெண் உள்ளிட்ட 4 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டன. அந்த இடத்தில் இருந்து 7 துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன. மேலும் அப்பகுதியில் தேடுதல் வேட்டை தொடர்கிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டவிரோத செயல்கள் மற்றும் வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபடும் மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் பணியில் சிறப்பு அதிரடிப்படையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதேசமயம், மாவோயிஸ்டுகள் வன்முறைப் பாதையில் இருந்து விலகி, சரண் அடைந்தால் அவர்களின் மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.
இந்நிலையில், தம்தாரி மாவட்டம் கல்லாரி மற்றும் மேக்கா கிராமங்களுக்கு இடைப்பட்ட வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று காலையில் சிறப்பு அதிரடிப்படை போலீசார் அங்கு சென்று மாவோயிஸ்டுகளை சுற்றி வளைத்தனர். அப்போது இரு தரப்பினருக்குமிடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
அதிரடிப் படையினரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் மாவோயிஸ்டுகள் பின்வாங்கினர். இதையடுத்து அங்கு நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் ஒரு பெண் உள்ளிட்ட 4 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டன. அந்த இடத்தில் இருந்து 7 துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன. மேலும் அப்பகுதியில் தேடுதல் வேட்டை தொடர்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X