search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி
    X
    ராகுல் காந்தி

    அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது மும்பை நீதிமன்றம்

    அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
    மும்பை:

    பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவுடன் ஒப்பிட்டு பேசியதாக ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் மீது மும்பை நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் திருதிமான் ஜோஷி வழக்கு தொடர்ந்தார். 2017ம் ஆண்டு இந்த வழக்கு தொடரப்பட்டது.

    சீதாராம் யெச்சூரி

    இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராகுல்காந்தி, யெச்சூரி ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என அவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இருவர் தரப்பிலும் ஜாமீன் மனுக்கள்  தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    ஜாமீன் மனுவை பரிசீலித்த நீதிபதி, ராகுல் காந்தியை ரூ.15 ஆயிரம் உத்தரவாதத்துடன் ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டார். இதையடுத்து முன்னாள் எம்பி ஏக்நாத் கெய்க்வாட் ராகுல் காந்திக்காக உத்தரவாதம் அளித்தார்.
    Next Story
    ×